Friday, December 9, 2011

கணம் இடறிய கடவுள்

தெருவெங்கும் பிரதியெடுத்தவர்களை
சுடரிடும் கண்களுடன்
கழற்றிவைத்தாள் மதுவாகினி
உறுத்தல் யாவும் அடங்கியவுடன்
மீண்டும் கண்களை பொருத்திக்கொண்டவள்
அதிசயித்தாள்
எதிரிலிருந்த யுவன்களோடு
இரு வயோதிகரும்
ஒரு கடவுளரும் நின்றிருந்தனர்
முதலாமவரை நெருங்க
அறுபது வருடங்களை
உன் வாசம் அளித்து இருபதாக்கியதாலென்றார்
மற்றவரோ
மனம் கிடந்த பிம்பம்
பெயர்ந்து
வீதியில் உலா வந்ததாலென்றார்
எட்டி நின்ற கடவுளோ
கணம் இடறினேன் குழந்தாய்
ஆண்டாளெனவென்றார் 

உறக்கத்தில் நீந்திச் சென்றாள் மதுவாகினி
தன்னிருப்பின் சிலிர்ப்பில்...

No comments:

Post a Comment