Tuesday, January 10, 2012

தீட்டுறிஞ்சி

..


தூர்த்த குளக்கரையிலிருந்து வந்த விசும்பலின்
துயர்வெடிக்க கலைந்த தூக்கத்தின் எரிச்சலோடு
இடம் அடைய அதிர்ந்தேன்
எழுப்பிய தூண்களிடையே நின்றிருந்தாள்
குலசாமியான செல்லியம்மன்
யாது துயர் தாயே
மண்டியிட்டேன்
அவளும் மண்டியிட்டு தலைநிமிராது
நாப்கீன்கள் படைத்திட வேண்டினாள்
வீடு திரும்ப நினைத்துக் கொண்டேன்
பெரியாயிக்கு சேலை படைக்கும்
அம்மாவின் வேண்டுதலையும்
நிறைவேற்றிட வேண்டுமென...

நன்றி: திண்ணை

No comments:

Post a Comment