Friday, January 13, 2012

தேவனின் கை தவழ்ந்த ஆடு

கொப்புகளால் அலங்கரிக்கப்பட்ட கொம்பு
நீண்ட வாலோடும்
திமிர்த்துத் திரியும் காளையானேன்
இறக்கையிருந்தும் பறக்கவியலாது
ஒடுங்கிக்கிடந்த கறிக்கோழியாக
அவதரித்ததற்குப் பின்
சிறிது நேரம் கழிய
பாவப்பட்டவர்கள் பின்தொடர்ந்து வர
தேவனின் கைகளில் தவழும்
ஆட்டுக்குட்டியானேன்

ஆடு மாடு கோழிகளை ருசித்திராத
ஞாயிற்றுக் கிழமையின் இரவில்...

நன்றி: புன்னகை

2 comments:

வலையுகம் said...

சகோதரர் பெரியசாமி அவர்களே
கொஞ்சம் எழுத்தை பெரியதாக்கி போடுங்கள்
படிப்போர்க்கு சிரமமில்லாமல் இருக்கும்

கவிதை பகிர்வுக்கு நன்றி

ந.பெரியசாமி said...

வணக்கம் சகோ.ஹைதர்அலி
மொபைல் மூலமாக அச்சேற்றுவதல் எழுத்தின் அளவு தெரியவில்லை. பெரிதாக்க முயற்சி செய்கிறேன். நன்றி

Post a Comment