Wednesday, January 18, 2012

நன்றி : உயிர்மொழி

உருவானார்கள் மகான்கள்
நெடிய தவத்தினால்
கெடுதிகளை கண்டுணர்ந்தார்கள்
உலகின் மீதான பற்றுதல்களால்
பிரகடனப்படுத்தினார்கள் விடாது
வழித்தோன்றியவர்களும் தொடர்ந்தனர்
கதை கவிதை ஓவியமென
தனக்குத் தெரிந்த மொழிகளில்
இயற்கையும் சொல்லிப்பார்த்தது
அதற்கான மொழியில்
நிலம் நடுங்கி புயல்கண்டு
சுனாமியாகி கொத்தாய் பறித்தும்
எதையும் செவிகொள்ளாது
சுயம் வளர்க்க தீரா பசியோடிருக்கும்
மயிராண்டிகளின் வாழ்வின் மீது
சாவகாசமாய் நின்று
நிறைவான மூத்திரம் பெய்வோம்...

No comments:

Post a Comment