Monday, January 23, 2012

நன்றி: உயிர்மொழி

சுழலும் கண்களை
என்னுள் மையமிடச் செய்யும்
ஆளுமையற்றன்தான்
பொந்துகளை நிரப்பும்
மண்ணாகவேணும் இருக்க லாயக்கற்றவனல்ல...

சொருகும் சேலையின்
மடிப்பு கலையாதிருக்கவும்
மலர் சூடிக்கொள்ள
ராமனுக்கு அணிலென
ஊக்கு வாங்கிக் கொடுக்க
ஈரம் வழியும் கூந்தல் உலர்த்த
சாம்பிரணி புகையிடவும்
உதிரும் குரல்களை
பொத்தி பொத்தி அடைகாக்கவும்
நதி ஏந்தி செல்லும் மலராக்கி
ஆசைகொள்ளும் தூரம்
இதழ்களின் ஒத்தடங்களால்
உடலசதி போக்கிடவும்
பேரன்பு செலுத்தக்கூடியவன்தான்

என்ன செய்ய
நோக்கிடும் ஆண்டாள்கள்
தன் பீடத்தோடு பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள்
இறைவனை நோக்கி...

No comments:

Post a Comment