Friday, February 17, 2012

வெறுமனே இருந்த நாளொன்றில்

மனம் விரும்பும் வேலையற்ற பொழுதினில்
வெறுமனே வேடிக்கையில் இருந்தேன்
சுவற்றில் அலைந்த பூச்சிகளை
தன் ஈர நாவால்
இழுத்துக்கொண்டிருந்தது பல்லி
அருகிருந்த சன்னல் வெளியில்
தன்னுள் இருந்த ஆயிரமாயிரம்
பின்னல்களை திரையாக்கி
விழும் பூச்சிகளை இரையாக்கியது
எட்டுக்கால் பூச்சி
இதிலென்னவென சலிப்படையாது
மேலே தொடருங்கள்
நானும் சலிப்படைந்த கணத்தில்தான்
காட்சிகளை மாற்றியமைத்தேன்
எட்டுக்கால் பூட்சியின் வேட்டைவலையில்
விழவைத்தேன் பல்லியை
பூச்சியின் நிலை குறித்து
சொல்வதற்கு ஒன்றுமில்லை
நீங்களாகவே விருப்பம்போல்
முடிவெடுத்துக்கொள்ளுங்கள்...
-நன்றி : பண்புடன் இணைய இதழ்

No comments:

Post a Comment