Sunday, March 18, 2012

கூந்தல்

உடல் நொறுங்கி சரிய
சபை அதிர்ந்தது
சூதாடி தலைதொங்கியவன்களின்
முகம் உமிழ்ந்த எச்சிலால்

சபதம் நிறைவு கொள்ள

பற்றி இழுத்தவனின் தொடை ரத்தம்
பூசி முடிந்த கூந்தலுள்
ஆதிக்க அழுகளின் வீச்சம் பெருக
நீராடி கேசம் நீவிய
துரோபதையை பிறப்பித்தது

குளித்து வந்த மதுவாகினியின்

கூந்தலில் வடிந்த நீர்த்துளிகள்... 

nantri:Thinnai

No comments:

Post a Comment