Saturday, April 14, 2012

மை டியர் மதுவாகினி


கொல்லப்புற கொடிகள் வதங்கிக் கிடக்கும்

மதிய பொழுதொன்றில் வந்தாய்
ஊரே திருவிழாவின் கொண்டாட்டமாய்
என்பொருட்டொன் அன்பை பகிர்ந்தளித்தாய்
எல்லோருக்கும் அப்பமாய்...
சிறு துளையொன்றில்
நதியின் பாய்ச்சலாய்
வாய்த்த நொடிப் பொழுதில்
கிள்ளி வலியூட்டினாய்
அன்றறிந்தேன்
மை டியர் மதுவாகினி
வலியும்
பெரும் ஊற்றெடுக்கும் இன்பமென...

நன்றி : கல்கி

No comments:

Post a Comment