Tuesday, May 29, 2012

காத்திருந்த துளி
 
 துளி நீராக்கினேன் உயிரை
பசிய இலையொன்றில் மிதக்கச் செய்தேன்
பெரும் மழை பொழிய கரையவில்லை
சூரியன் வெப்பத்தை அதிகரிக்க
உயிர்ப்போடே இருந்தது
காற்று சுழன்று சுழன்று வீசிட
உதிர்ந்து போகாது
இலை நரம்புகளில் உருண்டோடி விளையாடியது
தாகம் மிகுந்த பறவையிடம்
இலை முடிச்சாக தோன்றி தப்பியது
விளையாடும் சிறுவர்களிடம்
இலையையும் மறைத்து
தனை காத்த துளி
மரம் வெட்டப்படுவதற்கு முந்தைய நாளின்
மதிய பொழுதொன்றில்
நிழலடைந்த மதுவாகினியின்
கண்ணம் வழிந்து அவலுள்
கரைந்துபோனது...
nantri: vallinam.com





No comments:

Post a Comment