Wednesday, June 6, 2012

ஓணான் உருவாக்கிய பகை
 

ஓணான் ஒன்றை சாகடித்தேன்
நிலத்தில் புதைத்து அடையாளமிட்டு வந்தேன்
கிடைக்கும் காசை கொண்டு
வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலோடு
இடம் அடைந்து தோண்டினேன்
காசை பிறப்பிக்கும் முன்னே
நிலம் ஓணானை தின்றுவிட்டிருந்தது
அன்றுதான் துவங்கியது
நிலத்தின் மீதான பகை
யார் மீதாவது கோபம் வந்தால்
ஓங்கி மிதிப்பேன் நிலத்தை
அடிக்கடி காறித் துப்புவதுமுண்டு
சொந்த நிலங்களை அப்பா விற்றபோது
வீடு துக்கத்திலிருக்க நான் மகிழ்வேன்
மனையாளின் தொந்தரவால்
வேறு வழியற்று சொந்தமாக்கினேன்
வீட்டுமனை மட்டும்
இப்பவும் ஓணான் பார்க்க
ஆசை எழுவதுண்டு
நிலத்தின் மீதான பகையை முடித்துக்கொள்ள
சனியன் வயது தடையாய்...

நன்றி: மாற்றுப்பிரதி

2 comments:

செய்தாலி said...

கவிஞரே
ம்ம்ம் எக்சலன்ட்
சின்ன வயசில இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது
மறக்க முடியாத விஷயம்

என்ன சொல்ல அருமையான கவிதை சார்

ந.பெரியசாமி said...

நன்றி செய்தாலி சார்...

Post a Comment