Monday, July 23, 2012

அரவமற்ற ஊரில்
விஷமுறிவோடு வந்தவனின் முயற்சி
எல்லா வீடுகளிலும் முளைவிட
கலயம் கலயமாக விநியோகித்தான்
கடை விரித்து,..
O
சூரியனை
தின்னக் காத்திருக்கின்றன
புல்லின் நுனி அமர்ந்த
பனித்துளிகள்...
O
மது வண்ணக் கலவையின்
குணம் கழற்றும் சொற்கள
நினைவுகளில் தள்ளாடி தவிப்படக்குகிறது
கத்திப் பேசி கண்ணீர் வழித்து
அதிர சிரித்தும்...

நன்றி: வடக்கு வாசல்

No comments:

Post a Comment