Thursday, September 13, 2012


அணுஉலையெனும் மாய சுடுகாடு


நம்ப மறுத்தோம்
அறிவியலாளர்களின் சுலோகங்களை ஒளிபரப்பினீர்கள்
பொய்யின் ஆழம் அறிய
மேலும் அச்சம் கொண்டோம்
விசுவாச நாய்களை அழைத்தீர்கள்
மோந்து பார்த்து
மணமும் அற்புதமும் நிறைந்ததென
எஜமானர்களை திருப்திபடுத்தினீர்கள்
நாங்கள் நம்ப மறுத்தோம்
எச்சரிக்கை செய்தீர்கள்
அடித்து துன்புறுத்தினீர்கள்
சிறையில் அடைத்தீர்கள்
அயலக சதியென கொச்சைபடுத்தினீர்கள்
துப்பாக்கியால் சுட்டும் கொல்கிறீர்கள்
இப்பவும் நாங்கள் நம்ப மறுக்கிறோம்
எங்களுக்கு உண்மை தெரியும்
ஒரு சுடுகாடு
வெண்மை பரப்பி ஒளியூட்டும் பறவையை
ஒருபோதும் பிறப்பிக்காது...

1 comment:

செய்தாலி said...

உண்மை உண்மை கவிஞரே

Post a Comment