Monday, November 5, 2012

எஞ்சியவை

பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததை பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை

கழுவத் துவங்கினேன்
கையிருந்த பிசுபிசுப்பை

நன்றி: தீராநதி

No comments:

Post a Comment