Tuesday, November 6, 2012

அந்தரங்கம்

சீண்டலை
துவங்கியபடி இருந்தது புறா
பார்வையில் பாலினம் பகுக்கும்
படிப்பறிவு இல்லாதிருக்க
தொடங்கியது ஆணோ பெண்ணோ அறியேன்
தொடர்ந்த அவைகளின் காமத்தை
கண்களில் விழுங்க மனமின்றி
திசை மாறிய கணம்

என்னுள்ளும்
இசை ஊர்ந்தது.

நன்றி: தீராநதி

No comments:

Post a Comment