Wednesday, December 26, 2012

நள்ளிரவில் பிதாவோடு

நுழைய மறுத்தார்
என் அன்பின் பொருட்டு
அடுத்த அடியை எட்டி வைத்தார்
சவப்பெட்டி ஆனியின் துயரோடு
வாடை நிறைந்த தரைகள்
பிசுபிசுப்பை சகித்தார்
Bejois பிராந்தியை கலயம் நிரப்பினேன்
மேய்த்தலின் மகிழ்வை பகிரத் துவங்கினார்
பாவிகள் இதை அறியாது
விளக்குகளையும் வேதங்களையும்
பிரகாசிக்கச் செய்தபடி...

No comments:

Post a Comment