Saturday, July 27, 2013

பேரதிசயமாக இன்றும்
வழக்கமான மேசை கிடைத்தது
சிநேகம் பூத்த சிரிப்பிற்கு
இரண்டு பீர்கள் வந்தன
எண்ணும் இறந்து கிடக்கு
பார்த்து வாரமாகிவிட்டதென தொடங்கியவன்
இரண்டாம் பீரின் இறுதியில்
அழத் துவங்கிவிட்டான்
இனி அடுத்து ஆர்டர் செய்தால்
நிகழும் விபரீதம் அறிந்திருந்ததால்
வலியோடு எழுந்தேன்
எப்பவும் ஐந்தாம் பீரில் அழுபவன்
இன்று இரண்டிலேயே தொடங்கியமைக்காக...

No comments:

Post a Comment