Saturday, May 17, 2014

nantri: malaigal.com

சாபவிமோசனம்

ஒரு பூ
பாறையாகிக் கொண்டிருந்தது
சாபத்தினால் அல்ல
வேறு கதை உங்களுக்கு
நினைவிற்கு வரலாம்
பாதகமொன்றுமில்லை
வேகமாக அடிவாங்கிய
மட்டை பந்தை தேடிப் போனபோது
பெரும் குழியொன்றில் கண்டேன்
அதிசயித்து சப்தமெழுப்ப
திரண்ட பெருங் கூட்டத்தின்
வியப்பு அடங்கும் முன்
இனிப்புகளை வழங்கத் துவங்கினான்
வந்திருந்த பாறை வியபாரி.
*

வாக்கு மூலம்

அரசு கர்ஜித்தது
விஞ்ஞானிகளின் திசை அதிர
கூடியது ரகசிய மாநாடு
ஆனவத்தைக் காட்டி
அறிவை வாங்க முடியாது
ஆவேசமாக சிலர்
நடுநிலைவாதிகள் பரிந்துபேசி
ஆராய்ந்திடலாமென ஆமோதிக்கச் செய்தனர்
ஓராண்டுக்குப் பின்னர்
மனு ஒன்று அனுப்பப்பட்டது
மண்ணில் விளைவிக்க இயலாது
வேண்டுமானால் தாளில்
குழந்தைகள் பிறப்பிப்பார்களென.

அறிக்கை வாசிக்கிறது அரசு
விஞ்ஞானிகள் கடும் முயற்சியில் இருக்கிறார்கள்
விரைவில் பாறைகள் உருவாக்கப்படுமென.

nantri: malaigal.com

No comments:

Post a Comment