Wednesday, August 27, 2014

தோட்டாக்கள் பாயும் வெளி

மாடிக்கு ஏறுகிறீர்கள்
அமைதியான சூழல் இருக்க
கொண்டு சென்ற தாளை விரித்து
பிடித்த முயலை வரைகிறீர்கள்
உணவும் வசிப்பிடமும் வேண்டி
புற்கள் சூழ்ந்த புதரை ஏற்படுத்துகிறீர்கள்
ஏனோ நிறைவுகொள்ளாதிருக்க
ஒன்றிரண்டு மரங்களை உருவாக்குகிறீர்கள்
அழகு சூழ மகிழ்ந்தீர்
கணத்தில் கவலையடைந்தீர்கள்
முயல் தனித்திருக்குமென
இணை ஒன்றை தருவிக்கிறீர்கள்
இரண்டும் முத்தமிட்டபடி
சந்தோசமாக உலவிக்கொண்டிருக்கிறது
உங்களுக்கான இடம் அற்றிருப்பதை உணர்ந்து
நிழலான மரத்தடியில்
ஒரு கல்லைப் போடுகிறீர்கள்
அமர்ந்து வேடிக்கையில் களித்திருக்க

மெல்லிய சப்தத்தோடு இரண்டு தோட்டாக்கள்.

நன்றி: கல்குதிரை

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கு வரிகள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment